සිංහල  |  தமிழ்  |  English  |  日本人
அரஹத் மஹாநுவர வஜிர புத்தி தேரரின் போதனைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலைத்தளமாகும்

பௌத்தன் என்பவன் யார்?


(இந்தக் கட்டுரையானது அரஹத் மஹநுவர வஜிரபுத்தி தேரரின் பிரசங்கங்களைத் தழுவியதாகும்.)

புத்தரின் போதனைகள் மதமாக மாறிவிட்டது. புத்த மதத்தில் பல மரபுகள் காணப்படுகின்றன அவற்றை பின்பற்றுபவர்கள் தங்களை பௌத்தர்கள் என அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.உண்மையில் புத்தர் தனது போதனைகளை பல்வேறு மரபுகளில் வகைப்படுத்தியோ,தனது போதனைகளை புத்த மதம் என்று பெயர் சூட்டவோ இல்லை. உண்மையான தர்மத்தின் பார்வையில் , தூய போதனைகள்  சித்தார்த  கௌதம புத்தரால்  விவரிக்கப்பட்டுள்ளது .அதில் பௌத்தன் என்பவன் யார் என்ற கேள்விக்கு பதில் தெளிவாகின்றது.

பௌத்தன் என்பவன் சம்மதித்தி பற்றிய புரிதல் கொண்டவன் . துக்க ,சமுதாய,நிரோகய மற்றும் மஃக பற்றி ஏட்புத்தன்மைமையும் நுண்ணறிவும் கொண்டவன்.
 எமது லௌகீகவாழ்க்கையின் மீதான பற்றுதல் (தன்ஹா) காரணமாகதான்
இவ்வுலகில் நிரந்தரமான மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.  இப்பற்றுதலை குணமாக்க வழிகள் உண்டு. ஒருவன் இந்த பற்றுதலை விடுவித்து முத்தியை(நிர்வான) அடையும் வழியில் செல்பவனே  பௌத்தன் எனப்படுவான்.

ஒரு பௌத்தனின் வாழ்க்கை முறையானது அவ்யப்பட மற்றும் அவிஷம சாணக்கப்பா என்பவற்றை கொண்டு கட்டமைக்கப்பட்டது . வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து ,ஈகை குணதுடன் நல்ல எண்ணங்களுடன் ,மற்றவர்களுடன் பகிர்ந்து, இரக்கம் கொண்டு உதவி செய்யக்கூடிய வேளைகளில் உதவிபுரிந்து தனது வாழ்க்கை முறையை கொண்டு செலுத்த வேண்டும்   

பௌத்தன் என்பவன் தனது தார்மீக சிந்தனைகளில் உயர்ந்தவன். உண்மையை கூறுபவன்,பொய்களால் பிறரை ஏமாற்றாதவன்,புறஞ்சொல்லாதவன்,தனது வார்த்தைகளால் பிறர் மனதை புண்படுத்தாதவன்.தனது பேச்சினால் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவன் . இயற்கையுடன் கூடிய மனிதவாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவன் ,வாழ்க்கை என்பது விலைமதிப்பற்றது என்பதையும்  மிருகங்களுடைய வாழ்க்கையையும் மனித வாழ்க்கையையும்  i சம நிகர் ஆக கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவன்.
பௌத்தன் என்பவன் நேர்மையான,அமைதியான  வாழ்க்கைமுறையை கொண்டவனும் ,முறை கேடான வாழ்க்கை வாழாது தனது வாழ்க்கைத்துணைக்கு உண்மையாக ,குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ்பவன்  

பௌத்தர்கள் புராண சக்திகளின் உதவியில் தங்கியிருப்பவர்கள் அன்று.
அதோடு ஜெபித்தலில் நம்பிக்கையற்றவர்கள் கண்ணுக்குத்தெரியாத கடவுள்களிடம் உதவிகளை எதிர்பார்காதவர்கள்.பௌத்தர்கள் பயமற்றவர்கள் , அறிவார்ந்தவர்கள்,தமது ஞானத்தின் மீது நம்பிக்கைக்கொண்டவர்கள்

பௌத்தர்கள் கண்ணியமான வாழ்க்கைமுறையுடன் ,சம்சார(samsara ) வட்டத்தை விடுவித்து கொள்ளும் நோக்குடன் தனது கவனத்தை சமேத விபஸ்ஸனா
தியானத்தில் செலுத்துவார்கள்

இறுதியாக பௌத்தர்கள்  என்பவர்கள்  யார்?
பௌத்தர்கள்  என்பவர்கள் எட்டுமடிப்பு வாழ்க்கைப்பாதையில் சரியான திசையறிந்து திருப்பிச்செல்பவர்களே பௌத்தர்கள் ..