සිංහල  |  தமிழ்  |  English  |  日本人
அரஹத் மஹாநுவர வஜிர புத்தி தேரரின் போதனைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலைத்தளமாகும்

சீலம் - என்பது அறநெறி - ஒருவரின் சரியான நடத்தை


(இந்தக் கட்டுரையானது அரஹத் மஹநுவர வஜிரபுத்தி தேரரின் பிரசங்கங்களைத் தழுவியதாகும்.)

“சீல”  என்ற பௌத்த பதம், தார்மீக ஒழுக்கம் என்று பொருள்படும்.அதாவது எமது வார்த்தைகள்,உடல் மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றில்  சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் வேண்டும். 

எமது வார்த்தைகளில் சுய ஒழுக்கம்  -       எமது பேச்சானது 4 வழிகளில் கட்டுப்பாட்டினை இழக்கின்றது.
பொய் கூறல்- உண்மையை கூறாது பிறரை ஏமாற்றுகின்றோம்.
அவதூறு கூறல்- ஒருவரை பற்றிய வீண் உரையாடல் காரணமாக அவர்களை வீண் சங்கடங்களில் ஆழ்த்துகின்றோம்.
அற்பமான உரையாடல்களில் ஈடுபடல்-பயனற்ற  ,கருத்தற்ற உரையாடல்களில் ஈடுபாடு செலுத்துகின்றோம்.
வன் சொற்கள் கூறல்- பிறருக்கு விரும்பத்தகாத கடுமையான சொற்களை உபயோகித்து அவர்களின் அமைதியான மன நிலையை குழைக்கின்றோம்.
பௌத்தர்களாகிய நாம் இவ் 4 வழிகளில் கட்டுப்பாட்டினை இழக்கும் எமது பேச்சினை கட்டுப்படுத்தல் வேண்டும்.

உடல் ரீதியான சுய ஒழுக்கம் -          எமது உடல் செய்கை  ஆனது 3 வழிகளில் கட்டுப்பாட்டினை இழக்கின்றது.
பிற உயிர்களின் உயிரைப்பறித்து  கொலை செய்தல்,
நமக்கு உரிமையற்ற உடைமைகளை உடைமையாக்கி திருடல்,
கூட ஒழுக்கத்தில் ஈடுபட்டு வாழ்க்கைத்துணைக்கு துரோகம் செய்தல். ஆக பௌத்தர்களாகிய நாம் இம் 3 வழிகளிலும் இருந்து உடல் செய்கையை கட்டுப்பாட்டுடன் வைத்திருத்தல் வேண்டும்.

வாழ்க்கை முறையில்  சுய ஒழுக்கம் -           மிச்ச அஜீவ  இலிருந்து கட்டுப்படுத்தல்
பேச்சு மற்றும் உடல் செய்கைகளை கட்டுப்படுத்துவது போல் எமது வாழ்க்கை முறையையும் சுய கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும். எமது வாழ்க்கையை நேர்மையாகவும் நீதியாகவும் தனக்கும் பிறருக்கும் உண்மையாக வாழ்க்கையை வாழ வேண்டும், அநீதியான நேர்மையற்ற வாழ்க்கை முறையிலிருந்து எமது வாழ்க்கையை கட்டுப்படுத்தல் வேண்டும்.

எமது பேச்சினை 4 வழிகளிலிருந்தும் ,உடல் செய்கையை 3 வழிகளிலுருந்தும் , வாழ்க்கை முறையை தவறான முறையிலிருந்தும் கட்டுப்படுத்தி வாழும்போது , நாம் தார்மீக ஒழுக்கத்துடன் வாழ்கின்றோம். இதுவே சித்தார்த்த கௌதம புத்தரினால் விவரிக்கப்பட்டுள்ள உண்மையான sila

sila வை கண்காணிக்க பிரத்யேகமான இடத்திற்கு செல்லத்தேவையில்லை அல்லது அதைப்பெற பிறர் முன் நிற்கத்தேவையில்லை. sila என்பது தனக்கு தானே சுயஉணர்வுடன் செய்யும் அர்ப்பணிப்பு. பௌத்தர்களாகிய நாம் இந்த ஒழுங்குமுறையின் வழிகாட்டலின் படி சுய ஒழுக்கத்துடன் அகிம்சை மற்றும் அன்புடைமையை நோக்காகக்கொண்டு பின்பற்றல் வேண்டும்.  நாம் காலையில் எழுவது முதல் கொண்டு இரவு துயில் கொள்ளும் வரை வருடத்தின் ஒவ்வொரு நாளிலிருந்து எமது வாழ்நாளில் கடைசி வரை நாம் nirvaana  அடைகின்றோம் .பௌத்தர்கள்  sila வை பின்பற்றி தங்களை ஒப்புவிக்கின்றனர்.

பாவமான வாழ்க்கையை வாழ்வதை விட நேர்மையாக இருப்பதனால்  வரும் மரணம் விலைமதிப்பற்றது

பாவப்பட்ட வாழ்க்கையை நூறு ஆண்டுகள் வாழ்வதை விட நேர்மையாக வாழும் ஒருநாள் பெறுமதியானது.

sila வை பின்பற்றி வாழும் ஒருவருக்கு கிடைக்கப்பெறும் ஆசீர்வாதங்களை
பற்றி புத்தர் அழகாக விளக்கியுள்ளார்.

ஆசிர்வாதம் 1 - அவரின் செல்வங்களும் பயிர்களும் வளர்ச்சியுறும்.

ஆசீர்வாதம் 2 -அவர் தன் சமூகத்தில் மரியாதையுடன் பிரபலமாக பிரகாசிப்பார்
.
ஆசீர்வாதம் 3 - அறிவார்ந்த சபையோர் முன்னிலையிலும் பயமற்று துணிந்து
முன்செல்வர்.sila வை பின்பற்றும் நல்லொழுக்கம் உடையோர் யாவரையும் துன்புறுத்தாதவர்கள் ஆதலால் இவர்களை பலமான சக்தி  சுற்றிக்கொள்ளும்

ஆசிர்வாதம் 4 - வாழ்க்கையின் இறுதியில்  ஞானத்துடன் கூடிய மரணம்

ஆசிர்வாதம் 5 -    ஞானத்துடன் கூடிய மரணத்தின் பின்னர் பரலோகத்தில் மறு பிறப்பு அடைவர்.